இதுவரை வென்றவர்கள்
1952-ல் வி.கிருஷ்ணசாமி படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1957-ல் சாமிக்கண்ணு படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1962-ல் ராமச்சந்திர ராயர் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1967-ல் ஏ.கோவிந்தராசன் (திமுக), 1971-ல் எம்.ஏ.அபுசாலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 1977-ல் வி.ரகுராமன் (திமுக), 1980-ல் வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1984-ல் வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1989-ல் எஸ்.சிவலோகம் (திமுக), 1991-ல் ஜி.மல்லிகா (அதிமுக), 1996-ல் ஏ.வி.அப்துல் நாசர் (இந்திய தேசிய லீக்), 2001-ல் பி.எஸ்.அருள் (அதிமுக), 2006-ல் செல்வி ராமஜெயம் (அதிமுக), 2011-ல் செல்வி ராமஜெயம் (அதிமுக), 2016-ல் துரை.கி.சரவணண் (திமுக), 2021-ல் ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக).
மக்களின் எதிர்பார்ப்பு
அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். வெள்ள காலத்தில் விவசாய பயிர்களை பாதிக்காமால் இருக்கும் சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். புவனகிரியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றம் கொண்டு வர வேண்டும். வெள்ளாற்றில் உப்பு நீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன் வைக்கின்றனர். வன்னியர், ஆதிதிரவிடர், யாதவர், செட்டியார் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.
