“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” – மசோதா தோல்விக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் பதிவு

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசியிருந்தார்.

முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என தென் மாநில கட்சிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை அன்று கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Source link