எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் சாமானிய மக்களின் நலன் இருக்க வேண்டும் என, விஞ்ஞானி சிவகுமார் அறிவுறுத்தினார்.
சென்னை, வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கலாம் சபா என்ற நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார்.
இதை கடந்த 2024-ம் ஆண்டு நவ. 8-ம் தேதி விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை திறந்து வைத்தார். வியாசர்பாடி பகுதி மாணவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கவே இங்கு நூலகம் அமைத்திருப்பதாகவும். இந்த நூலகம். மாணவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் என்றும் டில்லி பாபு தெரிவித்திருந்தார்.
