Duleep Trophy – பைனல் எப்போது நடைபெறும்? எந்தெந்த அணிகள் தகுதி? கேப்டன் யார் யார் தெரியுமா? – duleep trophy 2026 final which teams will play

துலீப் டிராபி 2026 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்து இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

முதல் அரையிறுதிப் போட்டி: முதல் அரையிறுதியில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியின், முதல் இன்னிங்ஸில், இரு அணிகளும் தலா 266 ரன்களை அடித்தது. சென்ட்ரல் ஜோன் அணியில், ஆர்யன் ஜோரல் 46 (113), ரிங்கு சிங் 60 (88) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். ஈஸ்ட் ஜோன் அணியில், ஓபனர்கள் அபிமன்யு ஈஸ்வரன் 69 (106), வைபவ் சூர்யவன்ஷி 92 (81) ஆகியோர் மட்டும் சிறப்பாக ஆடினார்கள்.

அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில், சென்ட்ரல் ஜோனில் அமன் மோகட் 41 (89) என்பவர் மட்டுமே சிறப்பாக ஆடினார். இதனால், சென்ட்ரல் ஜோன் அணி, 158/10 ரன்களைதான் எடுத்தது. முகேஷ் குமார் 4 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

ஈஸ்ட் ஜோன் வெற்றி: 159 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஈஸ்ட் ஜோன் அணியில், வைபவ் சூர்யவன்ஷி 40 (43), கேப்டன் இஷான் கிஷன் 39 (41), ஆகியோர் சிறப்பாக ஆடியதால், ஈஸ்ட் ஜோன் அணி வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி: இரண்டாவது அரையிறுஇயில் நார்த் ஜோன், சௌத் ஜோன் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய நார்த் ஜோன் அணியில், ஓபனர் கம்ரன் இக்பால் 76 (182) மட்டுமே சிறப்பாக ஆடினார். இதனால், அந்த அணி, 195/10 ரன்களை மட்டுமே எடுத்தது.

அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய சௌத் ஜோன் அணியில், விக்கெட் கீப்பர் பேட்டர் ஜெகதீசன் 36 (63) ரன்களை அடித்த நிலையில், கேப்டன் திலக் வர்மா 116 (250), ஷ்ரேயஸ் கோபால் 87 (169) ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தியதால், ஸ்கோர் 312/10 ஆக உயர்ந்தது. அடுத்து, மெகா பின்னடைவுடன் இரண்டடாவது இன்னிங்ஸை துவங்கிய நார்த் ஜோன் அணியில், சனத் சங்வான் 76 (148), ஆயுஷ் டோசேஜா 52 (76), நிஷாந்த் சிந்து 35 (72), அன்ஷுல் கம்போஜ் 36 (29) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், 297/10 ரன்களை எடுத்து, சௌத் ஜோன் அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தனர்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய சௌத் ஜோன் அணியில், ஓபனர்கள் ரிக்கி புய் 42 (53), ஜெகதீசன் 43 (83) ஆகியோர் ஓரளவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து, கேப்டன் திலக் வர்மா 51 (59), ஸ்மரன் ரவிச்சந்திரன் 32 (42) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், சௌத் ஜோன் அணி, 182/3 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

அடுத்து, இறுதிப் போட்டி, வரும் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும். இந்த இறுதியில் போட்டியில் சிறப்பாக செயல்படும் பேட்டர்கள், பௌலர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த பைனல், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link