ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியாவை அனுப்பிவிட்டு, மாற்றாக தரமான வீரர்களை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்தது.
ஆனால், எந்த அணியும் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, தரமான இளம் வீரரை விட்டுக்கொடுக்க முன் வரவில்லை. குறிப்பாக, கேப்டன்ஸி தேவைப்படுகிற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கூட ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா ஆகிய இருவரையும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. மேலும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் கூட, நிகோலஸ் பூரனை கேட்டதும், பின்வாங்கிவிட்டது.
இதனால், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் அனுப்ப முடியாத சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது. இந்நிலையில், ஐபிஎல் 2027 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், 5 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
1.ஹர்திக் பாண்டியா டிரேடிங்: ஹர்திக்கை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. இதனால், ஐபிஎல் 2027 சீசனிலும் ஹர்திக் பாண்டியாவை முன் இந்தியன்ஸில் தக்கவைப்பதற்கு முயற்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளனர். ஹர்திக்கிற்கு மாற்றாக, எந்த அணியும் இளம் வீரரை விட்டுக்கொடுக்க முன் வரவில்லை. மேலும், ஐபிஎல் 2027 சீசனில்போது, அவருக்கு 33 வயதாகிவிடும் என்பதால்தான், அவரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. இதனை, பாண்டியாவுக்கு புரிய வைக்க முயற்சி எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
2.ரோஹித் முடிவே உறுதி: ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டனையும், தலைமை பயிற்சியாளரையும் தேர்வு செய்யும் பணியை ரோஹித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
3.சூர்யகுமார் யாதவ் சமரசம்: ஐபிஎல் 2027 சீசனுக்கு தனக்கு கேப்டன் பதவி வேண்டும் எனக் கேட்ட சூர்யகுமார் யாதவ், தற்போது ரோஹித் சர்மாவின் பேச்சு வார்த்தைக்கு பிறகு, கேப்டன் பதவி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
4.கேப்டன் பதவி, இறுதி முடிவு: ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டன்ஸி ரேஸில் திலக் வர்மா, ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர், தற்போது இருக்கிறார்கள். தனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால், டிரேடிங்கில் வெளியேறுவேன் என திலக் வர்மா தெரிவித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டார். அடுத்த கேப்டனாக திலக் வர்மா இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
5.டிரேடிங் பேச்சு, முக்கிய முடிவுகள்: ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பேச்சு குழுவில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோரை, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சேர்த்துள்ளது. டாப் ஆர்டரில் ஆடும் இந்திய இளம் பேட்டரை வாங்க, இவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம்.
ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்கி கேப்டனாக நியமித்தப் பிறகுதான், மும்பை இந்தியன்ஸ் அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால்தான், ஐபிஎல் 2027 சீசனுக்கு புதுக் கேப்டனை தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 2027 சீசனுக்கு பிறகு மெகா ஏலம் நடைபெறும். அந்த சமயத்தில், அணிக்குள் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளனர்.
