ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ஆண்ட்ரீவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் நம்பர் 3 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.
