இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசு ஒரு தகுதித் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான சிறப்பு மதிப்பீட்டுத் தேர்வு வரும் செப்டம்பர் 6-ம்தேதி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்வில் ஒவ்வொரு கட்டமாக தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதியாக தகுதிப் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்விதப் பொருளாதாரத் தடையுமின்றி, தரமான மற்றும் சிறந்த பயிற்சிகளைப் பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான (2027) யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை எழுத தயாராகும் தேர்வர்கள் மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
