‘இது முதல்முறையல்ல!’ – விவசாயிகள் வழக்கு ரத்து குறித்து வரலாற்றை புரட்டிய உதயநிதி!

இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் 110-ம் விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான திமுக ஆட்சி காலத்தில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது (விவசாயிகள் போராட்டம்)அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனித நேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

தவெக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று ஒரு அமைச்சர் பேசியிருந்தார்.

Source link