இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி: ஷஃபாலி அதிரடியால் வங்கதேசம் வீழ்ந்தது!

அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணி இலங்கையா? பாகிஸ்தானா? என்பது அவர்கள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவில் தெரிந்து விடும். நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இந்திய அணி , நீண்ட காலமாகவே இந்த தொடரில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது.

இந்த போட்டியில் தீப்தி ஷர்மா சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவி உள்ளார். அதே நேரம் ஶ்ரீ சாரணி 4 ஓவர்கள் பந்து வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்ததால் , வங்க தேச அணியின் ரன்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அவர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற 9 ஆசிய கோப்பை இறுதி போட்டிகளிலும் பங்கு பெற்ற ஒரே அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 7 முறை ஆசிய கோப்பை சாம்பியனாக வரலாறு படைத்துள்ளது. ஒருமுறை வங்கதேச அணியும் ஒரு முறை இலங்கை அணியும் ஆசியக் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link