நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 9:02 மணியளவில், விமானம் ‘பே எண் 06’ (Bay No. 06) பகுதியில் நிறுத்தப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம், ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ (VDGS) என்ற வழிகாட்டும் கம்பத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஏணிப் படிகள் உதவியுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த பிறகே உண்மை காரணம் தெரியவரும் என்றும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விமான நிலையத்தின் இயல்பான போக்குவரத்துப் பணிகள் பாதிக்கப்படாமல் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனத்திற்கு இது கடந்த 24 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது அசம்பாவிதமாகும். வியாழக்கிழமையன்று தோஹாவிலிருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தின் (6E 1302 – A321) பைலட் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக மஸ்கட் நகரத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மாற்று விமானம் மற்றும் ஊழியர்கள் மூலம் பயணிகள் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Post
Fri Sep 4 , 2026
தமிழக அரசில் அடுத்தடுத்து நிகழும் அமைச்சரவை மாற்றங்கள் அரசியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், K.A. செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கவனித்து வரும் அவருக்கு, பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி தொடங்கியபோது செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் நீடிக்காமல், முதல்வர் விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருவாய் மற்றும் […]

