கீழடி போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கை: கீழடி போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (23). ஜேசிபி ஆபரேட்டரான இவரை இன்று காலை டூவீலரில் பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கீழடி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பள்ளி சந்தை புதூரில் விரட்டி விரட்டி கொலை செய்தது .

கடந்த 2023 ல் இலந்தைகுளம் கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டி தொடர்பான தகராறில் கருப்புசாமி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக கண்ணன் (23) சேர்க்கப்பட்டுள்ளார். பழிக்குப் பபழியாக கும்பல் வெட்டி கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

Source link