குட் நியூஸ்..! இனி டைப் செய்ய வேண்டாம், பேசினாலே போதும்: தமிழ்நாடு அரசின் புதிய ஏ.ஐ (AI) திட்டம்..!

பொதுமக்கள் பயன்பாட்டை எளிதாக்க, தமிழகத்தின் அனைத்து 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவிலும் இந்த ஏ.ஐ டிஜிட்டல் கியோஸ்க்குகள் (Digital Kiosks) நிறுவப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் (Trial run) வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் முடிவுகள் மற்றும் திருத்தங்கள் முழுமையடைந்தவுடன், விரைவில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் உள்ள டிஜிட்டல் கியோஸ்க்களிலும் (Digital Kiosks) முழுமையாகச் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

தொழில்நுட்பத்தின் உதவியோடு அரசு நிர்வாகத்தை மிக எளிய முறையில் மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

Source link