கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மனு எதிரொலி: இன்று முதல் மின்னணு வாக்கு எந்திரங்கள் ஆய்வு!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் , தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வி.எஸ். பாபு என்பவரிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளும் , ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த தோல்வியை அடுத்து வாக்கு எந்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்யப்பட்டது.

திமுக தலைவரின் மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கொளத்தூர் தொகுதியில், பயன்படுத்திய மின்னணு வாக்கு எந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பாட் (VVPAT) எந்திரங்களை இன்று( 29.7.2026) சரிபார்ப்புகளை தொடங்குகிறது. வாக்கு எந்திரங்களின் சோதனை சோதனையின் பொழுது, இந்த தொகுதியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களையும் கலந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு அளித்துள்ளது.

மேலும் வாக்கு எந்திரங்கள் சரியாக செயல்பட்டனவா? என்பதை மட்டுமே ஆய்வு செய்யும். இது அதில் உள்ள வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் நடைமுறை அல்ல. என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

Source link