பிச்சைக்காரன் படத்தில் அம்மாவின் உடல்நிலை சரியாக வேண்டுமெனில் மகனாகிய நீ, 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் பிச்சை எடுக்க வேண்டும் என ஒரு ஆன்மீக குரு கூறுவார். இதனை ஏற்று அவரும் பணம், பதவி மற்றும் அந்தஸ்தை எல்லாம் துறந்து விட்டு பிச்சையெடுப்பார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதியின் கதாநாயகனின் அம்மாவின் உடல்நிலை சீராகி தேறி விடுவார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.
கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வருவது போன்றே ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தனது ஆன்மீக குரு கூறிய அறிவுரையின் படி சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் ஒருவர் ஒருநாள் முழுவதும் பிச்சையெடுத்து இருக்கிறார்.
அவர் பணக்காரர் மட்டுமல்ல; பாஜக-வைச் சேர்ந்த அரசியல்வாதியும், எம்எல்ஏ-வும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
