டாஸ்மாக் கடைகளில் கூவிக் கூவி மது விற்பனை

இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்மையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்ததுடன், மது பாட்டில்களுக்கு எம்ஆர்பி விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கினாலும் 3 மாத சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் இரண்டாவது முறை தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கூடுதல் விலை கிடையாது. கரெக்டா எம்ஆர்பி விலை தான் வாங்குகிறோம் என்று ஊழியர்கள் சத்தம் போட்டு வாடிக்கையாளர்களை அழைத்து மது விற்று வருகின்றனர்.

காலி பாட்டில்களைத் திரும்ப பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள ரூபாய் பத்து கட்டணம் மட்டுமே எம்ஆர்பி விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது.

இது குறித்த புகார்களைத் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்களும் கடைகளில் பொது மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளன.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதிய உயர்வு, கடைகளில் தூய்மை பணி மேற்கொள்ள மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இனி ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சமீபத்தில் அறிவித்தது நன்கு வேலை செய்கிறது.

அத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் ஊழியர்கள் தற்போது அரசு நிர்ணயித்த விலைக்கு மதுவை விற்கத் தொடங்கியுள்ளனர்.

அரசின் கடுமையான விதிகள் மற்றும் அதிரடி சஸ்பெண்ட் நடுவடிக்கைகளுக்கு பயந்து ஊழியர்கள் தங்களது வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

Source link