புதுடில்லி: டில்லி மெட்ரோவில் சக பயணிகளுடன் பயணம் செய்த வீடியோவை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
டில்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று (செப் 05) மாலை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். சாதாரண பயணிகளுடன் ரயிலில் பயணித்த அவர், பொதுமக்களுடனும் குழந்தைகளுடனும் அன்பாக உரையாடினார்.
இந்த வீடியோவை மெட்ரோ பயண அனுபவங்கள் என பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் மெட்ரோ பயணத்தின்போது நிகழ்ந்த உரையாடல்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டையும், வரவேற்றையும் பெற்று வருகிறது.
