தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையை நீட்டித்தது ஐகோர்ட்

சென்னை: 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை வரும் செப். 28ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும், தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் கமிஷன், மத்திய அரசு, சட்டசபை செயலாளர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் விஜய், எம்ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று (செப் 08) மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெருந்துறை முன்னாள் சட்டசபை எம்எல்ஏ ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் செப். 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 28ல் நடக்கும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வீடியோ!

5 தொதிகளில் இடை த்தேர்தல் எப்பொழுது; தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link