“திண்டுக்கல் சீனிவாசனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே யார் பெரிய Scientist எனப் போட்டி”- உதயநிதி | “A competition between Dindigul Srinivasan and Sellur Raju to see who is the greater scientist” Udhayanidhi

திண்டுக்கல் ​மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்குப் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்துட்டு இருக்கு. ​75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் (Bus Stand) கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

ஐ.பி. செந்தில்குமாரை எதிர்த்து போட்டி போடும் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மாபெரும் சிந்தனையாளர், பெரிய சயின்டிஸ்ட். அவர் சொல்றதெல்லாமே அப்போது புரியாது, அப்புறமாக வீட்டுக்குப் போய் யோசித்தால்தான் புரியும். அந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு தத்துவங்களைச் சொல்லுவார். அவருக்கும் பக்கத்து மாவட்டத்துல இருக்கக்கூடிய இன்னொரு சயின்டிஸ்ட் ஒருத்தர் இருக்கிறார், விஞ்ஞானி அண்ணன் செல்லூர் ராஜூ. இவங்க ரெண்டு பேருக்கும்தான் மிகப்பெரிய போட்டி.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஐ.பி.செந்தில்குமார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஐ.பி.செந்தில்குமார்

இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன போட்டி? யார் அதிகமா தத்துவங்கள் சொல்வது, யார் பெரிய சயின்டிஸ்ட் என இருவருக்குள்ளும் போட்டிகள் நடக்கின்றன. பாராளுமன்றத் தொகுதி வரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி ரொம்ப நல்ல விஷயம் என்கிறார். இதனால் யாருக்கும் பாதிப்பு வராது எனச் சொல்கிறார். தொகுதியும் மறு வரையறையால் பாதிப்பு வரும் எனச் சொல்லிவிட்டால் பாஜகவிடமிருந்து எடப்பாடி பழனிசாமிக்குப் பாதிப்பு வந்துவிடும்.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்றேன், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செஞ்சுக்கிட்டு இருக்கிறார். அவருக்கு வருகிற 23 ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பாடம் புகட்ட வேண்டும்” என்றார்

Source link