சிவகங்கை: “தொகுதி மறுவரையறை அரசியல் சாசன திருத்த மசோதாவில் பேராபத்து உள்ளது” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தொகுதி மறுவரையறை அரசியல் சாசன திருத்த மசோதாவில் பேராபத்து உள்ளது. அது நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்ததை வரவேற்கிறேன்.
அரசியல் சாசனத்தை திருத்த முற்பட்டதை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முறியடித்துள்ளது. இதன்மூலம், அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது. அதை தடுத்த எம்.பி.க்களுக்கு எனது பாராட்டுகள்.
