புதுடில்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதை ஒட்டிய தினங்களில் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் 7,000 ரூபாயாக இருந்த கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அக்., 12 முதல் 18 வரை நவராத்திரி காலத்தில் மும்பை – கொல்கட்டா ஒரு வழி விமான கட்டணம், ஒருவருக்கு 16,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தின் கட்டணம் 8,000 ரூபாய்க்குள் இருக்கும்.
டில்லி – மும்பை விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. வழக்கமாக 6,500 ரூபாயாக இருக்கும் இந்த வழித்தடத்தின் கட்டணம், பண்டிகை நாட்கள் வரும் அக்டோபர், நவம்பரில் 10,000 ரூபாயாக உள்ளது.
முக்கிய நகரங்களுக்கான நேரடி விமான டிக்கெட்டின் விலை 25,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
