“பதவி விலகுங்கள் அமைச்சரே” மாணவர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகை ஜோதிகா..!

சிஜேபி கட்சியினர் வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகளில் இரண்டிற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்து மத்திய அரசு ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 3:30 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுக்குப் பிறகே அமைச்சர் பதவி விலகுவாரா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மாணவர்களுக்கு ஆதரவாக ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். ஜனநாயக இந்தியாவையும், சீர்திருத்தப்பட்ட கல்வி முறையையும் நான் ஆதரிக்கிறேன். அரசை எதிர்த்து துணிச்சலாக போராடும் மாணவர்கள் மற்றும் சோனம் வாங்சுங் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை அப்ஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ் போல உருவாக்க நினைக்கிறோம். Gen Z தலைமுறையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மாணவர்கள் நிரூபித்து விட்டார்கள்” என ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

Source link