பயணிகள் கவனத்திற்கு: பேருந்துகளில் இனி இதை செய்யவே கூடாது!

ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணத்தின் போது நிலவும் அதிகப்படியான இரைச்சலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரயில் பயணத்தை இனிதாக்க பயணிகள் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல் கேட்பதும் தடை செய்யப்பட்டது. அதையும் மீறி பயணிகள் யாரேனும் சத்தமாக பேசி, மற்ற பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தினால், ரயில்வே துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.

இந்நிலையில் பயணத்தின் போது அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது போக்குவரத்து துறையின் இன்றியமையாத பணி. இதன்படி தமிழ்நாடு போக்குவரத்து துறையிலும் இந்தப் புதிய முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் பயணத்தின் போது பாடல்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயணிகள் ஹெட்போன் அல்லது இயர் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மொபைல்போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசுவது அல்லது சத்தமான குரலில் பேசுவதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.

புகார் அளிக்கலாம்:

பேருந்துகளில் பயணத்தின் போது விதிமுறைகளை மீறி யாரேனும் சத்தமாக பேசினாலோ அல்லது பாடல்கள் கேட்டாலோ, பயணிகள் நடத்துநர் அல்லது ஓட்டுநரிடம் புகார் அளிக்கலாம்.

​விழிப்புணர்வு நடவடிக்கை:

அரசுப் பேருந்துகளில் அமைதியான பயணத்திற்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது மற்றும் அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிப்பு செய்வது போன்ற விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் இந்தப் புதிய நடைமுறையைப் பற்றி ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளிடம் எடுத்துக் கூற வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுரைத்துள்ளது.

Source link