உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளர் பிளாக் பாண்டி நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
19 போட்டியாளருடன் செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி அனல் பறக்கும் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து இரவு பகலாக உழைத்து மக்களை என்டர்டெயின் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிளாக் பாண்டி போட்டியாளர் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 10ல் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி 6ஆம் தேதி அமர்க்களமாக தொடங்கப்பட்டது. பிளாக் பாண்டி வெளியேறியதால் தற்பொழுது போட்டியாளர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 10ல் தான் எந்த சீசனிலும் இல்லாதபடி பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையில் இருந்தபடியே வெளியேறி உள்ளனர்.
