போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் விதிகளில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள செபி ஆலோசித்து வருகிறது. இதன்படி, மியூச்சுவல் பண்டுகளில் மட்டும் முதலீடு செய்யும் எம்.எப்., – பி.எம்.எஸ்., எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த செபி முன்மொழிந்துள்ளது.
இந்திய பி.எம்.எஸ்., ஒழுங்குமுறை அமைப்பு ஏற்கனவே வலுவானதாக இருந்தாலும், தற்போதைய முன்மொழிவுகள் அதை மேலும் நவீனப்படுத்தி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் முயற்சியாக கருதப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்
* பி.எம்.எஸ்., சேவைகளில் முதலீடு செய்ய குறைந்தபட்சமாக 50 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில், எம்.எப்., – பி.எம்.எஸ்., திட்டத்தில் 25 லட்சம் ரூபாய் முதலே முதலீடு செய்யலாம்
* இத்திட்டத்தில் மியூச்சுவல் பண்டுகளின் நேரடி திட்டங்கள், இ.டி.எப்.,கள் மற்றும் எஸ்.ஐ.எப்., உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யப்படும்
* ஆண்டுக்கு அதிகபட்சமாக 2.50 சதவீத மேலாண்மை கட்டணம் அல்லது முதலீட்டின் லாபத்தை பொறுத்த செயல்திறன் கட்டணம் வசூலிக்கப்படும்
* நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிகர மதிப்பு தேவை 5 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக குறைக்கப்படும்.
