புதிதாக தங்கம் வாங்கினால் மறக்காம இந்த விஷயத்தை பண்ணுங்க..!! வீட்டில் தடையின்றி இன்னும் தங்கம் சேரும்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமியின் அம்சமான தங்கம் தடையின்றி சேர்ந்து பெருகுவதற்கு, நமது முன்னோர்கள் பல்வேறு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். பொதுவாக அனைவரும் அட்சய திருதியை அன்று மட்டுமே தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் நிலையில், மற்ற நாட்களில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் அதிர்ஷ்டமும் தங்கச் சேர்க்கையும் பன்மடங்கு பெருகும்.

புதிதாக வாங்கிய தங்க நகைகளில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்காக, அவற்றை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியிலோ அல்லது வெள்ளைக் காகிதத்திலோ சுற்றி, சிறிது நேரம் கல் உப்பில் புதைத்து வைக்க வேண்டும். இந்த எளிய பரிகாரத்தைச் செய்வதன் மூலம் நகையில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தோஷங்கள் நீங்கி வீட்டில் சுபகாரியங்களும் நகை சேர்ப்பும் அதிகரிக்கும்.

சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் மற்றும் அமிர்தயோகம் ஆகிய மூன்றும் கூடிவரும் நன்னாளை முன்னோர்கள் ‘தங்க கணபதி தினமாக’ அனுஷ்டித்து வந்துள்ளனர். இந்நாளில் அதிகாலையில் நீராடி, விநாயகர் சன்னதியிலோ அல்லது வீட்டிலோ ‘ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என்ற கணபதி முப்பு மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால், வீட்டில் தங்கத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது ஐதீகம். மேலும், ஜாதகத்தில் லக்கினத்தில் குரு, பத்தாம் இடத்தில் சந்திரன், பதினொன்றாம் இடத்தில் புதன் இருக்கும் சுப யோகக் காலங்களில் நகை வாங்குவதும் தொடர்ந்து தங்கம் சேர வழிவகுக்கும்.

புதிய தலைமைச் செயலகம் அமைய விடமாட்டோம்..!! மீனவ மக்கள் நம்பிக்கையோடு இருங்க..!! சீமான் பரபரப்பு அறிக்கை..!!

Next Post

Sun Sep 13 , 2026

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்கள் மற்றும் கர்மவினைகளில் இருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட புதிய சிலையை வீட்டில் வைத்து பூஜித்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. களிமண் தண்ணீரில் கரைவது போல, நமது பாவங்களும் கர்மவினைகளும் கரைய வேண்டும் என்ற […]

Vinayagar 2026

Source link