பிரிட்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் மைதானத்தில், நடைபெறும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 38வது இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சுற்றில் (Silverstone Racing Circuit), தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித்குமாரும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 34 ஆண்டுகால சினிமா பயணம் மற்றும் நீண்டகால திரையுலகப் போட்டி ஆகியவற்றைத் தாண்டி, இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்வு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று சில்வர்ஸ்டோனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பந்தயத்தில் ஓட்டிய நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்த தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து சென்றிருந்தார்.
வெளியான வைரல் வீடியோக்களில், முதல்வர் விஜய் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து நடிகர் அஜித்தை பாசத்துடன் ஆரத்தழுவி வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. மலையாள நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பு குறித்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து “Awesome” என சிலாகித்துள்ளனர்.
சில்வர்ஸ்டோன் மைதானத்தில் 44 கார்கள் கொண்ட பந்தயத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கும் வகையில், தமிழக முதல்வர் விஜய் பெருமிதத்துடன் பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தைச் துவக்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில், அஜித் குமாரின் ‘அஜித் ரெட்ஆன்ட் பை விராஜ்’ அணி, ஒட்டுமொத்த வெற்றியாளரை விட மூன்று சுற்றுகள் பின்தங்கி, இரண்டு மணி நேரப் பந்தயத்தை முடித்து, ஒட்டுமொத்தமாக 38வது இடத்தைப் பிடித்தது.
Next Post
Sun Sep 13 , 2026
அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் (அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல்) வழக்கத்தை விட அதிக வலுவுடன் மூன்று சக்திவாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) எச்சரித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் வானிலை ஆய்வுத் தரவுகளின்படி, கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைக் காட்டிலும் இந்த ஆண்டு புயல்களின் ஆற்றல் மற்றும் தீவிரம் சுமார் 83 சதவீதம் வரை […]

