மக்கள் தொகை அதிகரிக்கும்போது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உறுப்பினர்களுக்கு சவால்கள் அதிகரிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது அரசியல் சாசனத்தில் அவ்வப்போது தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது, அதில் நாம் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவோம். இதன் காரணமாக எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இப்போது எதிர்ப்பவர்கள், எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிககை உயர்வதையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள்.
தொகுதி மறுவரையறையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பல புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன, பல புதிய மாவட்டங்கள் உருவாக்கின்றன. இவை அனைத்தும் இந்த தொகுதி மறுவரையறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்களுக்கு சரிசமமான அதிகாரத்தை அளிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவது, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்களின் நோக்கம்.
