“பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா, அச்சமா?” – தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ப.சிதம்பரம் சந்தேகம்

ஆனால், அதைச் சொல்லாமல் பிரதமர், உள்துறை அமைச்சர் உண்மையை மறைக்கின்றனர். மறுசீரமைப்புக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை மறைத்து, பாதி உண்மையை மட்டுமே சொல்கின்றனர். அதனால்தான், இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.

எதிர்க்கும் எம்பிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மசோதா நிறைவேறாது. நான் கூறும் கணக்குக்கு யாராவது எதிர் கணக்கு இருந்தால் கூறலாம். மேலும் இந்த விஷயத்தில் பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா? அச்சமா? என்று தெரியவில்லை. சட்டத்தைப் படித்துப் பார்த்து பழனிசாமி கருத்துச் சொல்லவில்லை. அவரது கருத்தைச் சொல்லச் சொன்னால், அமித்ஷா கருத்தைச் சொல்கிறார்.

எங்களது குரலை விஜய் ஒலித்ததற்குக்கு நன்றி சொல்கிறேன். மசோதாவைத் திரும்பப் பெற்றால் நாங்கள் பிரதமருக்கு பொதுவெளியில் நன்றி சொல்வோம்” என்றார் ப.சிதம்பரம்.

Source link