மாணவர் போராட்டத்திற்கு ஏன் ஆதரவு தரவில்லை?

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் தன்னிச்சையான போராட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடு செவிசாய்க்க வேண்டும் என்று கவிஞரும் அரசியல் பிரமுகருமான சினேகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவு உண்டு. தற்போதைய முதலமைச்சர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவும், கட்சி தொடங்குவதற்கு முன்பாகவும் மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்குத் தீவிரமாக ஆதரவு குரல் கொடுத்து வந்துள்ளார். ஆனால், தற்போதைய நீட் எதிர்ப்புப் போராட்டங்களின் போது அவருடைய குரல் ஏன் இன்னும் ஒலிக்கவில்லை. அவரை அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது எது என்றும் தமக்குத் தெரியவில்லை.

இது குறித்துப் பத்திரிகையாளர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்.மாணவர்களின் உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் வகையிலான தேவையற்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். இரண்டு அரசாங்கங்களும் மாணவர்களின் உயிரைக் காக்கும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த நியாயமான போராட்டத்திற்கு நடுநிலைமையாளர்களும், கல்வியாளர்களும், இளைய தலைமுறையினரும் தங்களின் வலுவான ஆதரவை வழங்க முன்வர வேண்டும்” என்றார்.

Source link