சென்னை: சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
கேள்வி: சட்டசபை மாண்போடு நடக்கிறதா? நீங்கள் சட்டசபையில் நெடுநாள் அனுபவம் கொண்டவர், தற்போது மாண்போடு நடப்பதாக பார்க்கிறீர்களா?
ஸ்டாலின் பதில்: நீங்களே கேள்வி கேட்கிறீர்களே? மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
