ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு; திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 30 இடங்களில் சல்லடையாக சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஐஆர் வெளியானது. கட்சி நிதி என்ற பெயரில் டெண்டரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Source link