முக்கிய அம்சங்கள் :
தகுதி: 19 முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
காப்பீட்டுத் தொகை: குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம்.
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு: இந்த திட்டத்தில் தோராயமாக தினமும் ஐம்பது ரூபாய் வீதம் மாதந்தோறும் ரூ.1,500 ஒருவர் சேமிப்பதன் மூலம் முதிர்வு காலத்தில் போனஸுடன் சேர்த்து ரூ.35 லட்சம் வரை ரிட்டனாக பெற முடியும். உதாரணமாக, 55 வயதில் முதிர்வடைந்தால் சுமார் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் ரூ.34.60 லட்சமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரீமியம் செலுத்தும் காலம்: கிராம சுரக்ஷா யோஜனாவில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
