“விஜய்யை நம்பி வந்த 6 அதிமுக எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியாக இல்லை” சிவப்ரியன் சொன்ன விஷயம் – அடுத்தது என்ன? – 6 aiadmk mlas who joined tvk are not happy says sivapriyan what happens next

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

குறிப்பாக, விஜய் ஆட்சி அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியின் அனுமதியின்றி அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் ஆதரவு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியவர்கள்

இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் 2,000 அதிமுக உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு கட்சிக்குள் எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்திஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் நீண்ட காலமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கே தவெக தலைமை முன்னுரிமை வழங்கி வருவதாக கட்சிக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

மீண்டும் எடப்பாடி பக்கம் செல்லும் யோசனையா?

இந்தச் சூழலில், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லலாமா என ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.மேலும், இசக்கி சுப்பையா தனது வழக்கு முடியும் வரை எம்எல்ஏவாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசக்கி சுப்பையாவின் கோரிக்கை என்ன சொல்கிறது?

இசக்கி சுப்பையா தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக தொடர்ந்து இருப்பேன் என்றும், மறுதேர்தல் நடைபெறும் வரை அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நடைபெற்ற தனியார் செய்தி விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் சிவப்பிரியன் பேசுகையில், அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியவருவதாகக் கூறினார்.மேலும், இசக்கி சுப்பையாவின் நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு செய்தியாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு

அதிமுகவில் இருந்து பிரிந்த எம்எல்ஏக்கள், இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு செல்ல முடியும் என்றும் நம்பியிருந்ததாக சிவப்பிரியன் குறிப்பிட்டார்.ஆனால், தேர்தல் தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

விஜய் கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள்! இது தானா?

இந்த நிலையில், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யையும் அவரது மக்கள் ஆதரவையும் நம்பி அதிமுகவை விட்டு வெளியேறிய எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Source link