தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இல்லம் முன்பு, கட்சியின் தேர்தல் சின்னமான விசில் உருவத்தை நிர்வாகிகள் கோலமாக வரைந்து உள்ளனர்
பெரம்பூரில் களமிறங்கிய தளபதி – நேரில் வரைந்த விசில் கோலம்
பனையூர் மட்டுமல்லாது, விஜய் அவர்கள் தனது தொகுதியான பெரம்பூரிலும் நேரடி களப்பணியில் ஈடுபட்டார். அங்குள்ள வீதிகளில் பெண்களின் வேண்டுகோளை ஏற்று, அவரே நேரில் தரையில் அமர்ந்து விசில் சின்னத்தை கோலமாக வரைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வீடு வீடாகச் சென்ற பரப்புரை: மக்களின் கவனத்தை ஈர்த்த நூதன யுக்தி
பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த விஜய், அங்குள்ள பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். வழக்கமான போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்களைத் தாண்டி, இந்த விசில் கோலம் என்ற கலாச்சார ரீதியான பிரச்சார யுக்தி பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் அன்பான வேண்டுகோள்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கடந்த ஏப்ரல் 16, 2026 அன்று சென்னை தாஜ் கோரமண்டலில் தனது கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் நூதனமான வேண்டுகோளை விடுத்தார்: தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், என் மீது அன்பு கொண்ட தாய்மார்கள், அக்காக்கள் மற்றும் தங்கைகள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் தவெக-வின் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை கோலமாக வரைய வேண்டும்.
இது எனக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளை ஏற்று, தற்போது தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்களும் பெண்களும் தங்கள் வீட்டு வாசலில் விசில் கோலமிட்டு ஒரு புதிய தேர்தல் பிரச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
