அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அட்டைதாரர்களின் வகைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மின்னணு எடை இயந்திரம் (Electronic Weighing Machine) மற்றும் விற்பனை முனைய இயந்திரத்துடன் (e-PoS) நேரில் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கைரேகை பதிவு பெற்று பொருட்களை வழங்குகின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தின் 5,7 மற்றும் 8-ந்தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், கொளத்தூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயில் உள்பட் 19 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,346 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள அத்தியாவசிய பொருடகளை வீடு தேடி சென்று வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
