மேலும் 46 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் உள் மாவட்டங்களில் வறட்சி நிலை உருவாகலாம் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் சில கடலோர பகுதிகளில் திடீர் கனமழை, மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் எல் நினோ உச்சம் பெறும்போது, சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த கால எல் நினோ ஆண்டுகளில் (குறிப்பாக 2015 மற்றும் 2023) நிகழ்ந்ததைப் போல, திடீர் அதி தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கவும், வெள்ளப்பெருக்கு உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், இந்த வலுவான ‘எல் நினோ’ நிலை 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்க 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
