240 பயணிகளுடன் சென்ற இந்தோனேஷியா கப்பல் திடீர் மாயம்.. நடுக்கடலில் நடக்ககூடாத சம்பவம்

ஜகர்தா: இந்தோனேஷியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென்று மாயமாகி உள்ளது. இதனால் கப்பலில் பயணித்த 240 பேரின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தோனேஷியாவின் கிழககு ஜாவா பகுதியில் இருந்து போர்னியா தீவில் உள்ள தெற்கு கலிமந்தானுக்கு இந்த கப்பல் பயணித்து கொண்டிருந்தது. கப்பலில் மொத்தம் 240 பேர் இருந்தனர். ஜாவா கடலில் பயணித்தபோது திடீரெனறு கப்பல் தொடர்பை இழந்து மிஸ்ஸானது. இதுபற்றி அறிந்தவுடன் மீட்பு படையினர் கப்பலை தேடும் பணியை தொடங்கி உள்ளனர்.