இதைத் தொடர்ந்து, இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அண்மையில் இந்தியா டுடே நிகழ்த்திய Mood of the Nation கருத்துக் கணிப்பில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் விஜய் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் பதவி விலகுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். தங்களுக்கு பதவியை விட கட்சியே முக்கியம் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் மற்றொரு புறம் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எல்லா கருத்துக்கணிப்பும் உண்மையல்ல என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே முதல்வர் விஜய் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றும், அவர்தான் 2029 இல் பிரதமர் ஆவார் என்றும் தவெக எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை கூறிக் கொண்டு வருகின்றனர்.
இது தவெக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
