வெ*டி வி*பத்தில் ஒருவர் உயிரி*ழப்பு : முதல்வர் விஜய் இரங்கல்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் ஒத்தையால் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (05.09.2026) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 33), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இந்த துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவரது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link