ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை – 30 அதிரடி குழுக்கள் அமைப்பு

இதற்கிடையே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை ஆண்டு முழுவதும் இயக்கத் தயாராக இருப்பதாக இந்த ஆண்டு ஜூலையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றிலும் கட்டணம் உயர்வு இருக்குமா எனும் சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

ஆனால் விதிமீறல், பயணிகளிடம் முறைகேடான வசூல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும். பயணிகள் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஏதுவாகத் போக்குவரத்துத் துறை சார்பில் உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன.

போக்குவரத்துத் துறை புகார் எண் 1800 425 6151 இது போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் கட்டணமில்லா எண் ஆகும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தலாம்.

புகாரை தொலைபேசி அழைப்பு, WhatsApp குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமாகவும் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கும்போது பேருந்து நிறுவனத்தின் பெயர், பேருந்து எண் அல்லது பதிவு எண், பயணித்த தேதி மற்றும் நேரம், ஏறும் இடம் – இறங்கும் இடம், வசூலித்த கட்டணம்,முன்பதிவு செய்த தொகை / டிக்கெட்,அதிக கட்டணம் காட்டும் டிக்கெட் அல்லது ஸ்கிரீன்ஷாட், புக்கிங் இணையதள விவரம் இவற்றுடன் தேவைப்பட்டால் புகைப்படம் அல்லது வீடியோ போன்ற தகவல்களை தயாராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, டிக்கெட் மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை அழிக்காமல் வைத்திருப்பது முக்கியம்.

Source link