TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு – யார் போட்டியிடுகிறார்கள்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு
வாக்கு

இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக நேற்று அறிவித்திருந்தது. மதுராந்தகத்தில் திமுக சட்டத்துறை செயலர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா ஆகியோரும் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தவெக தற்போது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுவதாக தவெக அறிவித்திருக்கிறது.

மரகதம் குமரவேல்
மரகதம் குமரவேல்

அதிமுகவில் இருந்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

Source link