#BREAKING: 118வது பிறந்தநாள்: பேரறிஞர் அண்ணாவுக்கு முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி..!!

பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் விஜய் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியர் பேரறிஞர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு பார்வையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். எழுச்சியூட்டும் மேடை பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களை கவர்ந்தவர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

Source link