இதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ளதாக, மேலும், 300 புதிய சுற்றுலா மையங்களை தமிழக அரசு கண்டறிந்து, அப்பகுதிகளை மேம்படுத்தவும் முடிவெடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆசியாவில் சுற்றுலா முதலீட்டிற்கு ஏற்ற முக்கிய களமாக தமிழகத்தை உருவாக்க கருதி, உலகளாவிய சுற்றுலா மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தமிழக சுற்றுலாத்துறை, தொழில்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
