#BREAKING: முதல்வருக்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட்.! இடைத்தேர்தலில் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க தயக்கம்.!

கடந்த 2 நாட்களக்கு முன்பு தாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை நாங்கள் தமிழக அரசின் அமைச்சரவையிலும் இல்லை என சிபிஎம் முன்னாள் மாநில செயலர் தெரிவித்தார். அதோடு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தவெக சார்பில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக அரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து அளித்த ஆதரவு தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை செயற்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில், சற்று முன் முக்கிய முடிவை வெளியிட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கலந்தாலோசிக்க மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டிய அதேசமயம், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதால், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் சிபிஐ கூட்டம் நடைபெற்று முடிந்தது.

Source link