அறிவு ஒருபோதும் சித்தாந்த எல்லைக்குள் அடைபடக்கூடாது: அமித்ஷா வலியுறுத்தல்

மும்பை: உண்மையான அறிவு ஒருபோதும் சித்தாந்த எல்லைக்குள் அடைபடக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆசியாடிக் சொசைட்டியில் ஸ்ரீ கணேஷ் ஞானாரதி கண்காட்சி இன்று (செப்.13) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

அறிவு என்பதே ஒரு தனித்துவமான சித்தாந்தம், அதை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தும்போது அதன் உண்மையான அர்த்தத்தை அது இழந்துவிடுகிறது .வரலாற்றை மீட்டெடுப்பது என்பது கடந்த காலத்தை அழிப்பது அல்ல, மாறாக உண்மையான வரலாற்று உண்மைகளை இந்தியப் பார்வையில் வழங்குவதாகும்.தங்களுடைய பாரம்பரியத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அழிந்துவிடும்.

இந்தியா தனது வரலாறு, மரபுகள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதால் இன்றும் நிலைத்து நிற்கிறது.நாளந்தா நூலகம் எரிக்கப்பட்டாலும், அங்குள்ள இயற்பியல் நூல்கள் அழிக்கப்பட்ட போதிலும், நினைவு மற்றும் பாரம்பரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட நமது பாரம்பரியம் பிழைத்துக்கொண்டது. மும்பை ஆசியாடிக் சொசைட்டியின் சேகரிப்புகளை சமூகத்தின் பரந்த நலனுக்காக எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Source link