எழுதியவர்கள்: விகாஸ் பதக், காயத்ரி மணி
2013-ல், அப்போதைய தளர்வடைந்த யு.பி.ஏ ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், “மோடி அலை” உருவாகத் தொடங்கிய சூழலில், ஒரு சவாலான தலைவராக நின்று அவர் உரையாற்றிய இடம் இது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திர மோடி மீண்டும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரிக்குச் (எஸ்.ஆர்.சி.சி) சனிக்கிழமை மூன்றாவது முறை பிரதமராகத் திரும்பியுள்ளார். தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, மத்தியக் கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் இந்த வருகை அமைந்துள்ளது.
எனவே, அவரது உரையின் வடிவமைப்பு தெளிவாக இருந்தது. தேர்வுப் போட்டிகள் நிறைந்த எஸ்.ஆர்.சி.சி கல்லூரியின் மாணவர்களிடம் அவர் பேசினார். இந்தத் தலைமுறையினர் 2029 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்கள்; ஆனால் 2013-ல் இவர்கள் பள்ளிச் சிறுவர்களாகவே இருந்திருப்பார்கள். மேலும், 2014-ல் அவர் வெற்றி பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக, தங்களது போராட்டங்கள் மூலம் அவரது கட்சியின் ஆதிக்கத்தைச் சந்தேகத்திற்கு இடமாக்கிய அதிருப்தியடைந்த இளைஞர்களிடையேயும் அவர் பேசினார்.
மோடி இதை வலியுறுத்தினார்: அந்த நேரத்தில் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளைப் பற்றி அறிய நீங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தீர்கள் என்று எஸ்.ஆர்.சி.சி மாணவர்களிடம் கூறிய அவர், அன்றைய செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அவர் இரண்டு செய்திகளைத் தெரிவித்தார்: ஒன்று, தனது 13 ஆண்டுகால ஆட்சி பல்வேறு பிரச்னைகளில் முன்னேற்றம் கண்டு சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்துள்ளது; இரண்டு, அவரை விமர்சிப்பவர்கள் இந்த இளம் தலைமுறையினருடன் ஒத்துப்போகாதவர்கள் – அவர்களே ‘நாராஸ் ஃபூஃபா’ (கோபமான மாமா), அனைத்து எதிர்மறையான எண்ணங்களுக்கும் அவர்களே ஊற்றுக்கண் என்றார்.
இதன் மூலம், தன்னை மிகக் கடுமையாக விமர்சித்த மாணவர் போராளிகளை – அவர்களைத் தான் “மன்னித்துவிட்டதாக” முந்தைய செய்தியில் தெரிவித்திருந்தார் – தொடர்ந்து எதிர்த்து வரும் அரசியல் எதிரிகளிடமிருந்து பிரித்துக் காட்ட முயன்றார். அவர்களை கோபமான மாமாக்கள் என்று அழைப்பதன் மூலம், அவர்களின் தாக்குதலால் தான் கலங்கவில்லை என்பதையும், செங்கோட்டை உரையில் தான் ‘திமாஹி நக்சல்’ (நக்சல் மனப்போக்கு உடையவரக்ள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது அவர்கள் சீண்டப்பட்டு எரிச்சலடைந்தார்கள் என்றும் கூறினார்.
மாணவர்களிடம் பேசிய அவர், தனது தொலைநோக்குப் பார்வையை அவர்களின் மூத்த மாணவர்களிடம் (சீனியர்களிடம்) விளக்கியதை நினைவுகூர்ந்தபோது ‘ஜென் ஸி’ சொற்றொடர்களைப் பயன்படுத்தினார் – ஜென் ஸி தலைமுறையினரால் மூத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஓ.ஜி (OG – ஒரிஜினல் கேங்ஸ்டர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்; மேலும் அன்றைய அரசாங்கத்தை விமர்சிப்பதில் இருந்து தான் எவ்வாறு விலகி இருந்தேன் என்றும் கூறினார்.
2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்குத் தயாராகி வரும் நிலையில், புதிய உச்சங்களைத் தொட மாணவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். “உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள முன்னாள் மாணவர்கள் ‘ஓ.ஜி’ ஆவர். அவர்கள் எஸ்.ஆர்.சி.சி-யின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பியுள்ளனர்,” என்று பிரதமர் கூறினார்.
கல்லூரி மற்றும் அதன் முன்னாள் மாணவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, சமீபத்திய ஹிட் திரைப்படமான ‘துரந்தர்’ என்பதைப் பற்றிக் குறிப்பிட்டார்: “துரந்தராக இல்லாவிட்டாலும், பெரும் அலையை/சாதனையை உருவாக்க வேண்டும்.”
தனது முன்னாள் சகாவான அருண் ஜெட்லியை அவர் நினைவுகூர்ந்தார். எஸ்.ஆர்.சி.சி-யின் முன்னாள் மாணவரான அருண் ஜெட்லி, தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை தனது தாய் நிறுவனத்துடனான பிணைப்பைத் தக்க வைத்துக் கொண்டார். “நமது அருண் ஜெட்லி ஜி இங்குதான் படித்தார். எங்கள் கூட்டங்களில் எஸ்.ஆர்.சி.சி பற்றிய ஏதேனும் ஒரு சம்பவத்தை அவர் கூறாத கூட்டமே இல்லை என்று என்னால் சொல்ல முடியும். சில சமயங்களில், ஒரே சம்பவத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறுவதால் நான் சலிப்படைந்து விடுவேன்… எனது குழுவிலும் எனது பிற சக ஊழியர்களிலும் இங்கு படித்தவர்கள் உள்ளனர்… பொருளாதார உலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்கள் முதல் தலைவர்கள் வரை, வழக்கறிஞர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரும் இங்கிருந்துதான் உருவாகியுள்ளனர். அதாவது எஸ்.ஆர்.சி.சி மக்கள் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்துள்ளனர்,” என்றார் பிரதமர்.
“நீங்கள் லட்சியவாதிகளாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் லட்சியத்தை எந்தப் பயிற்சியாலும் கற்றுக்கொடுக்க முடியாது… பெரிய கனவுகளைக் காண உங்களைத் தூண்டும் சூழலில் இருந்தே லட்சியம் உருவாகிறது. இன்று ஒரு இளைஞன், ‘நான் சொந்தமாக ஏதேனும் செய்தால், ஒரு ஸ்டார்ட்-அப்பைத் தொடங்குவேன். ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்பினால், அதை யூனிகார்னாக மாற்றுவேன். விண்வெளி மற்றும் ட்ரோன்கள் போன்ற துறைகளுடன் இணைந்தால், பெரிய அளவில் எதையாவது செய்வேன். அதிநவீன ஏ.ஐ தீர்வுகளை உருவாக்குவேன். விவசாயத்தில் புதுமைகளைக் கொண்டு வருவேன்’ என்று கூறுகிறான்,” என்றார் மோடி.
13 ஆண்டுகளுக்கு முன்பு, “உங்கள் சீனியர்களால் இதுபோன்ற கனவுகளைக் காண முடிந்தது இல்லை” என்று அவர் கூறினார். ஆனால் இன்று, “இன்றைய இந்தியா இதுபோன்ற கனவுகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாலேயே நீங்கள் இந்தக் கனவுகளைக் காண்கிறீர்கள்” என்று அவர் தொடர்ந்தார். இப்போது பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய வேண்டிய நேரம் இது என்றும் அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு முதல் பயங்கரவாதம் வரை, பொருளாதாரம் முதல் உலகளாவிய உறவுகள் வரை, கடந்து வந்த “தூரத்தைக்” கோருவதற்காக அவர் 2013-ம் ஆண்டையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். “நண்பர்களே, நாட்டில் ஒவ்வொரு முனையிலும் போராட்டம், போராட்டம் மட்டுமே இருந்த காலம் அது; இது இன்று. இன்று, பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் பின்வாங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஏதேனும் துரோகச் செயலில் ஈடுபட்டால், இந்தியாவின் படைகள் அவர்களின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன… ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை அமைதி திரும்பியுள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. அன்று இந்தியாவில் கொள்கை முடக்கத்தைக் கண்டு கவலையடைந்த உலகம், இன்று இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் வேகத்தைப் பற்றி விவாதிக்கிறது…”
கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மீண்டும் வலியுறுத்த அவர் இதே பாணியில் தொடர்ந்தார். “நினைவில் வையுங்கள், 2013-ல் கேதார்நாத் பேரழிவு நடந்தபோது, நீங்கள் அனைவரும் பள்ளியில் படித்திருக்கலாம். அப்போது முழு அரசாங்கமும் நெருக்கடியால் சூழப்பட்டிருந்தது. என்ன செய்வது, எப்படி செய்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. 2008-ல் வங்கி நெருக்கடி வந்தபோது, அன்றைய அரசு 2007-லேயே அந்த நெருக்கடிக்கு பணிந்து போக முயன்றது. அதைத் தொடுவதற்குக்கூட தைரியம் இல்லை. இந்தியாவின் முழு வங்கி அமைப்பும் சரிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது. 2008-லேயே மும்பையில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அன்றைய அரசு வெளிப்ப அழுத்தத்திற்கு உள்ளாகி, பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டக்கூட தைரியம் இல்லாமல் இருந்தது,” என்றார்.
