எனக்குன்னு பிள்ளையே இல்லப்பா.. விஜயால் வைரலான மேட்டூர் பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை: கண்கலங்கும் நெட்டிசன்கள்! – cm vijay viral mettur patti breaks down to vlogger i have no one to share this joy with

பிள்ளையே இல்லை என ஏங்கிய மேட்டூர் பாட்டியின் சோகத்தைக் கண்டு நெகிழ்ந்த நெட்டிசன்கள், தற்போது அவரைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தத்தெடுத்து அன்பைப் பொழிந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய் அவர்கள் மேட்டூர் அணைக்குச் சென்றிருந்தபோது, அங்கு எதிர்பாராத விதமாக செல்லம் என்ற பாட்டியைச் சந்தித்தார். அந்தத் தருணத்தில் முதல்வர் தான் அணிந்திருந்த விலையுயர்ந்த கிறிஸ்டியன் டியோர் சன்கிளாஸை அந்தப் பாட்டிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பாட்டியை நேரில் சந்தித்த ஒரு இன்ஸ்டாகிராம் வ்லாகர், அவருடன் செலவழித்த நெகிழ்ச்சியான தருணங்களை பதிவு செய்துள்ளார். ஒரு மனிதனாக அந்தப் பாட்டியின் உணர்வுகளைப் புரிந்து எழுதிய அந்தப் பதிவின் சுருக்கம் இதோ:

குழந்தை போன்ற தூய்மையான மகிழ்ச்சி

“காலையில தளபதி (முதலமைச்சர் விஜய்) வந்து அந்தப் பாட்டிக்குக் கண்ணாடியும், புடவையும் கொடுத்துட்டு, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டுப் போன அந்த நிமிடம் இருக்கே… அது உண்மையிலேயே ஒரு மேஜிக்! அவர் கிளம்பினதுக்கு அப்புறம், நான் அந்தப் பாட்டிகிட்ட போய் சும்மா ஜாலியா பேச ஆரம்பிச்சேன். தளபதியைப் பார்த்தப்ப அவங்க மனசுக்குள்ள என்ன தோணுச்சுன்னு கேட்கணும்னு ஆசைப்பட்டேன். நான் கேட்டதும், அந்தப் பாட்டி ஒரு சின்னக் குழந்தை மாதிரி துள்ளிக் குதிச்சு சந்தோஷப்பட்டாங்க.
‘தளபதி என்கிட்ட பேசினாரு… எனக்குக் கண்ணாடி கொடுத்தாரு… புடவை கொடுத்தாரு…’ அப்படின்னு அவங்க முகத்துல இருந்த அந்தப் புன்னகையும் பெருமையும் வார்த்தைகளால விவரிக்க முடியாத ஒன்று.” என்றும் பதிவிட்டு உள்ளார்.​

நெஞ்சை உலுக்கிய பாட்டியின் தனிமை

“நாங்க பேசிட்டே இருக்கும்போது திடீர்னு அந்தப் பாட்டி ரொம்ப எமோஷனல் ஆயிட்டாங்க. அவங்க சொன்ன ஒரு வார்த்தை என் மனசை அப்படியே கனக்க வச்சிடுச்சு. ‘எனக்குன்னு பெத்த பிள்ளைங்க யாரும் இல்லைப்பா…
ஆனா நீங்க எல்லாரும் இப்படி ஓடிவந்து என்னைப் பார்த்து, என்கிட்ட பேசி, இவ்வளவு பாசம் காட்டுறதை நினைச்சா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு…’ அப்படின்னு அவங்க கலங்கினப்ப, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என்றும் பதிவிட்டு உள்ளார். ஆனா, அந்த உணர்ச்சிப் போராட்டத்துக்கு நடுவுலயும் அவங்க மனசுல ஒரு அழகான திருப்தி தெரிஞ்சது. ‘பரவாயில்லை, என்னை தேடிப் பார்க்க பிள்ளைங்க வராங்க, என்கிட்ட அன்பா பேசுறாங்க, அதுவே எனக்குப் போதும்’னு ரொம்ப பெருந்தன்மையா பேசினாங்க.” என்றும் பதிவிட்டுள்ளார்.

மறக்க முடியாத ஒரு அழகான நினைவு

“தளபதி விஜய் கொடுத்த அந்த சன்கிளாஸ், அந்தப் பாட்டிக்கு வெறும் ஒரு பொருள் மட்டும் கிடையாது. அது அவங்க வாழ்நாளின் மிக அழகான ஒரு பொக்கிஷம், ஒரு மாறாத நினைவு. அந்த நினைவுகளைச் சுத்தி, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசி, சிரிச்சு, அவங்க மனசுக்குள்ள இருந்த உண்மையான சந்தோஷத்தை என் கண்ணால நேர்ல பார்த்த அந்த நிமிடம் இருக்கே… அது என் வாழ்க்கையில என்னால என்னைக்குமே மறக்க முடியாத ஒரு அழகான தருணம். உண்மையில, இந்த உலகத்துல நாம அந்தப் பாட்டிக்குக் பெருசா எதுவும் கொடுத்துட முடியாது. அவங்ககூட கொஞ்ச நேரம் அன்பா உட்கார்ந்து பேசுறதும், அவங்ககிட்ட கொஞ்சம் பாசத்தைக் காட்டுறதும் மட்டும்தான் நாம செய்ய முடிஞ்ச பெரிய விஷயம். அதுவே அவங்களுக்குப் போதுமானதா இருக்கு.”​

இது வெறும் வீடியோ அல்ல, ஒரு வாழும் நினைவு!

“நாங்க சோஷியல் மீடியால போடுற இந்த வீடியோ, ஏதோ வியூஸுக்காகவோ அல்லது கன்டென்டுக்காகவோ பண்ணினது கிடையாது. தனிமையில் வாடும் ஒரு பாட்டியின் மனசுக்குள் இருந்த அந்தப் பேரானந்தத்தை, அந்தத் தூய்மையான மகிழ்ச்சியை என்றென்றும் அழியாமல் பாதுகாத்து வைப்பதற்கான ஒரு சிறிய நினைவுப் பெட்டகம், அவ்வளவுதான்! எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

பாட்டியை தத்தெடுத்த நெட்டிசன்கள் 

“எனக்குன்னு பிள்ளையே இல்லப்பா…” என்று விஜயால் வைரலான மேட்டூர் பாட்டி உதிர்த்த அந்த ஒரு வார்த்தை, ஒட்டுமொத்த இணையத்தையும் கலங்க வைத்துள்ளது. பாட்டியின் தனிமை துயரைக் கண்டு நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள், தற்போது அவரைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தத்தெடுத்துஅன்பைப் பொழிந்து வருகின்றனர்.

Source link