மக்களவையில் பெண்களின் 33 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து மறு வரையறை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்து விடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் மக்களவையில் 850 இடங்கள் கொண்டு வரப்படும் இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு போராட்டம் செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை அவர் செய்யவில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. வளர்ந்து வரக்கூடிய மாநிலத்துக்கும், பெண்களுக்கும் இடம் ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தருவதில் முதல்வர் ஸ்டாலின் தவறி விட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான் அவரது குறிக்கோள். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி” என்றார்.
