புதிய கூட்டணிக்குப் பெயர்?; தவெக தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று  (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, சிபிஐ, ஐயூஎம்எல், சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்து அதிகாரப்பூர்வ அழைப்பை நேரில் வழங்கினர். ஆனால் இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதே போல், தவெக கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு மாநில அளவில் பெயர் வைப்பதா? அல்லது தேசிய அளவில் பெயர் வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தில் பங்கேற்க மாணிக்கம் தாகூர், தாரகை கத்பட், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய மூவரை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. 

Source link