புதுடில்லி: தேசமே முதன்மை என்ற உணர்வை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலுப்படுத்தி வருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.
அவரது பதிவு: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பொறுப்பு வகிக்கும் மோகன் பாகவத் தேச சேவை, சமூக நல்லிணக்கம் மற்றும் இந்திய கலாசாரத்தைப் பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்.
சமூகத்தைப் பற்றிய புரிதலைப் பெற அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார்; தலைவர் என்ற முறையில், சேவை மனப்பான்மை, நற்பண்புகள் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம், சமூகத்தில் தேசமே முதன்மை என்ற உணர்வை அவர் வலுப்படுத்தி வருகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் திகழ இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
